என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் பலி"
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகு தியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றார். அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வளைவில் திரும்பும் போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
களம்பூர் அடுத்த சென்னானந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.
இவரது மனைவி காவியா, 1 வயதில் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆரணியிலிருந்து சென்னானந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோவுடன் வந்து கொண்டிருந்தார்.
பெருமாள் என்பவரின் நிலத்திற்கு அருகில் ரோட்டின் வளைவில் திரும்பும் போது ஆட்டோ திடீரென நிலை தடு மாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களம்பூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர்.
- தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிரஷர் நிறுவனம் உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டர் வெடித்து திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்
- கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்
பல்லடம் :
கோவை மாவட்டம் சூலூர் செங்கத்துறை பகுதியைச் சேர்ந்த முருகசாமி என்பவரது மகன் பாலதண்டபாணி (வயது 49). இவர் ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் இவர் வீட்டருகே வசிக்கும் கோபிநாத் ( 36) என்பவர் குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் செல்வதற்காக நேற்று அதிகாலை சூலூரில் இருந்து புறப்பட்டனர். ஆம்னி வேனை பாலதண்டபாணி ஓட்ட, கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆம்னி வேன் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கற்களில் மோதியது. இதில் ஆம்னி வேன் மேற்கு திசை நோக்கி திரும்பி சாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாலதண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோபிநாத்திற்கு பலத்த காயமேற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம்போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
- மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.
அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார்.
- நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு செல்ல கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் வந்தார். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.
- அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்ட எல்லை யான தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு பேரிகார்டு அமைத்து வாகனங்களை சோதனை செய்து போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரை யில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிரே முட்டை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.
இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த கார்களும் அடுத்துடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பக்கம் முற்றி லுமாக சேதம் அடைந்து டிரைவர் உடுமலைப்பேட் ைட அருகே மடத்துக்கு ளத்தை சேர்ந்த அருண்குமார் (வயது30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தேவதான ப்பட்டி போலீசார் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி யில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
- திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது58) டிராக்டர் டிரைவர். அதே பகுதியில் சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் சகதியில் சிக்கி மூச்சு திணறி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யனார் கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார்.
- அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உருமன்குளத்தை சேர்ந்தவர் முருகையன் மகன் அய்யனார் (வயது 20). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் புதுவை மாநில கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார். வாரம் ஒருமுறை செஞ்சி அருகே உள்ள வீட்டிற்கு சென்று பெற்றோரை பார்த்து விட்டு பணிக்கு திரும்பிவிடுவார். அதன்படி நேற்று மாலை புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு சென்றார்.
புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் அருவாப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அய்யனாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- படுகாயமடைந்த கிளீனருக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (21) வேன் டிரைவர். அதே வேனில் கிளீனர் வேலை பார்ப்பவர் பிரவீன்குமார்(19).
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி செல்வதற்காக வந்தனர் .
ராணிப்பேட்டையில், சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென வேனின் பின்பக்க டயர் பழுதடைந்துள்ளது.
இதை தொடர்ந்து வேனை நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி லோடு வேன் மீது மோதியது.
இதில் வேன் டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த கிளீனர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
கிருஷ்ணகிரி,
உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டம் ஷோரா ஸ்பங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசன் (வயது33). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நானாசந்த் (வயது 33).
சம்பவத்தன்று இருவரும் கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி ேதசிய ெநடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ராம்கிசன் படுகா யமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றனர்கள் நானாசந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்